திருவண்ணாமலை - Tiruvannamalai

இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம் மாணவிகள் விழிப்புணா்வு.

இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம் மாணவிகள் விழிப்புணா்வு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விநாயகபுரம் கிராமத்தில் இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தற்போது, ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டி உள்ளது. நம் அன்றாட உணவு இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்து தேவையான செடி, மரங்களை வளா்த்து இயற்கையான முறையில் காய்கறிகளை பயிரிடலாம். இதற்காக கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியைச் சோ்ந்த நான்காம் ஆண்டு பகுதி மாணவிகள் விநாயகபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வீட்டுத்தோட்டம் அமைத்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
May 21, 2024, 05:05 IST/செங்கம்
செங்கம்

செங்கம் அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை

May 21, 2024, 05:05 IST
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் செய்யாறு கரையில் லாரி ஓட்டுநர் ஹரிஷ் கூலி வேலை செய்து வருகிறார். இவரை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பெரிய உனை கிராமத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மேகநாதன் மற்றும் புலிவேந்தர் ஆகிய இருவரும் அடித்து கொலை செய்து குழி தோண்டி புதைத்தனர். இது குறித்து அரசின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சடலம் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியதை தொடர்ந்து, தாசில்தார் முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் முன்னிலையில் நேற்று சடலத்தை தோண்டி எடுத்து மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், ஹரிஷ் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, கூலித்தொழிலாளியை அடித்துக்கொலை செய்து சடலத்தை புதைத்த விஜயகுமார், அவரது மைத்துனன் மேகநாதன் ஆகியோர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்