
திருவண்ணாமலையில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு
திருவண்ணாமலை ஈசானிய குளத்தில், வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தும் வகையில் வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக பேரிடர் எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டாட்சியர் தியாகராஜன் தலைமையில் இன்று (அக் 9) நடைபெற்றது. இந்நிகழ்வில் தீயணைப்புத் துறை வீரர்கள் மழை மற்றும் நீரில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.