இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம் மாணவிகள் விழிப்புணா்வு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விநாயகபுரம் கிராமத்தில் இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தற்போது, ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டி உள்ளது. நம் அன்றாட உணவு இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்து தேவையான செடி, மரங்களை வளா்த்து இயற்கையான முறையில் காய்கறிகளை பயிரிடலாம். இதற்காக கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியைச் சோ்ந்த நான்காம் ஆண்டு பகுதி மாணவிகள் விநாயகபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வீட்டுத்தோட்டம் அமைத்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.