கஞ்சா பொட்டலடத்துடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது

561பார்த்தது
செங்கம் அருகே கஞ்சா பொட்டலடத்துடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது, இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து செங்கம் போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முறையாறு டோல்கேட் அருகே செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது திருவண்ணாமலையிலிருந்து செங்கம் நோக்கி மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலம் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டதில் மூன்று பேரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த சஞ்சய் (22) மற்றும் இரண்டு சிறார்களான கிருஷ்ணன் (18) சூர்யா (17) என்ற மூன்று நபர்களை கைது செய்த செங்கம் போலீசார் அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பொட்டலம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி