மணச்சநல்லூர் - Manachanallur

விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி... பயணி படுகாயம்

விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி... பயணி படுகாயம்

மண்ணச்சநல்லூர் புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், ஆட்டோ ஓட்டுனர். இவர் தனது பயணிகள் ஆட்டோவில் பிரபாகரன் என்ற பயணியை ஏற்றிக்கொண்டு ஈச்சம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம்மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த பிரபாகரன் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம்குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன ஓட்டுனர் தில்லாம்பட்டியைச் சேர்ந்த வேலவன் என்பவர்மீது வழக்குப்பதிவு செய்து மனச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా