மணச்சநல்லூர் - Manachanallur

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த நபர் பலி

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த நபர் பலி

சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். சம்பவம் நடந்த கடந்த எட்டாம் தேதி அன்று தனது வீட்டின் மாடிப்படியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ரமேஷ் குமார் நேற்று(செப்.12) சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த ரமேஷ் குமாரின் மனைவி ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా