மணச்சநல்லூர் - Manachanallur

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு: இளைஞர் காயம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு: இளைஞர் காயம்

சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதூர் கிராமத்தில் ஒன்பதாம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த கௌசிக் என்பவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் குடிபோதையில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், அஸ்வின்குமார் ஆகிய இருவரும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த கௌசிக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உதடு பகுதியில் காயம் அடைந்த கௌசிக் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கௌசிக் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా