தஞ்சாவூர் - Thanjavur City

மறியலில் ஈடுபட்டவர்கள் 30 பேர் கைது

மறியலில் ஈடுபட்டவர்கள் 30 பேர் கைது

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, தஞ்சையில் மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கக் கூடாது. சங்கம் சேரும் உரிமை, கூட்டு பேர உரிமையை நிலைநாட்ட வேண்டும். சாம்சங் நிறுவன சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு துணை போகக்கூடாது. காவல்துறையை ஏவி விட்டு தொழிலாளர்கள் போராட்டத்தை ஒடுக்கக் கூடாது. சாம்சங் தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். சங்கத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் என தமிழக அரசையும், தொழிலாளர் நலத்துறையையும் வலியுறுத்தி, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   இதையொட்டி சிஐடியு தஞ்சை மாவட்டக் குழு சார்பில், தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ம. கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள்  து. கோவிந்தராஜூ, இடிஎஸ். மூர்த்தி, த. முருகேசன், கே. அன்பு, கே. வீரையன், ஜி. மணிமாறன்,   சா. செங்குட்டுவன், பி. ஜேசுதாஸ், சாய் சித்ரா, பி. காணிக்கை ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా