இடிந்து விழுந்து 3 ஆடுகள் சாவு

491பார்த்தது
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராணி மற்றும் அம்பிகாபதி ஆகியோர் மேய்ச்சலுக்கு சென்ற மூன்று ஆடுகள் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள வெற்றிசெல்வன் என்பவரின் மாட்டுக் கொட்டைகையில் ஒதுங்கின.

அப்போது எதிர்பாராதவிதமாக கன மழையினால் அந்த மாட்டுக் கொட்டை கை இடிந்து விழுந்ததில் 3 ஆடுகளும் அதில் சிக்கி பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து விஏஓ துரைராஜ், ஆர்ஐ ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பூதலூர் தாசில்தார் அருணகிரி நிவாரணம் வழங்க பரிந்துரை மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி