
நெல்லை: சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் ஏற்பாட்டில் கோட்டூரில் நேற்று சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட தலைவர் கனி, துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செயலாளர் ஆரிப் பாதுஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.