நெல்லை மாநகர சிந்துப்பூந்துறை தாமிரபரணி ஆற்றில் இன்று (பிப்ரவரி 19) பாதாள சாக்கடை நீர் நேரடியாக கலக்கின்றது. நெல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிபதிகள் நேரடியாக ஆய்வுக்கு வரும்போது நீதியரசர்களை ஏமாற்ற தாமிரபரணி ஆற்றுக்கு மேக்கப் போட்ட அதிகாரிகள் அதற்குப் பிறகு நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.