வாக்குறுதியுடன் வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ
உழைப்பாளர்கள் தினம் இன்று (மே 1) கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகர் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நடைபெறும் மக்களவை தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து தொழிலாளர்கள் நலன் காக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என உறுதி அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.