ராதாபுரம் - Radhapuram

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பாராட்டு விழா

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பாராட்டு விழா

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பாக இரத்தான கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அனீஸ் பாரடைஸ் ஹாலில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரஹ்மதுல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை தலைவர் பர்கிட் யாசின் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகிகள் போத்தீஸ் முகம்மது பாபு, பாளை மஜீத், அஜீசுதீன், மைதீன், சல்மான் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூசுப் பாஷா துவக்க உரை ஆற்றினார். அப்போது கடந்த 16 ஆண்டுகளாக இரத்ததானம் சேவை செய்து வருகிறோம் கடந்த மூன்று ஆண்டுகளில் 2200 யூனிட் இரத்ததானம் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, மண்டல செயலாளர் கனி, மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், விவசாய அணி மாநில தலைவர் சேக் அப்துல்லா, மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா, வர்த்தகர் அணி மண்டல தலைவர் ஹயாத் முகம்மது, மாவட்ட தலைவர் சிட்டி சேக், நடுவ குறிச்சி பஞ்சாயத்து துணை தலைவர் சேக் முகம்மது கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் மூன்று முறை தொடர்ந்து இரத்ததானம் வழங்கிய இரத்த கொடையாளர்கள் 50 நபர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


పెద్దపల్లి జిల్లా