கூடங்குளம் பிரசித்தி பெற்ற கோவில் கொடை விழா

77பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற சப்பானி மாட சுவாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாதத்தை முன்னிட்டு கொடை விழா நேற்று (ஆக.,23) வெகு விமரிசையாக நடைபெற்றது. கொடை விழாவில் நையாண்டி மேளம், செண்டை மேளம், வான வேடிக்கையுடன் சப்பானி மாடசாமிக்கு தீச்சட்டி ஏந்தியபடி திரளான பெண்கள், சிறுமியர் முளைப்பாரி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தனர்.

அதனை தொடர்ந்து கும்மிப்பாட்டு பாடி முளைப்பாரியை சுற்றி வலம் வந்தனர். பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கொடை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடை விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி