மானமதுரை - Manamadurai

பிரதமர் மோடி வருகை முன்னிட்டு ரயில் பராமரிப்பு தீவிரம்

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, தென்னக ரயில்வே ரயில் பாதைகள் மற்றும் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல் 6 அன்று பாம்பன் பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு, விபத்து மீட்பு மற்றும் பரிசோதனை ரயில் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மதுரையில் இருந்து இன்று காலை கிளம்பிய ரயில், மானாமதுரையில் விபத்து மீட்பு மற்றும் பராமரிப்பு பணிகளை தொடங்கியது. பிரதமர் பயணிக்கும் வழியில் முக்கிய அதிகாரிகள் செல்வதை முன்னிட்டு, மானாமதுரை ரயில் நிலையத்தில் சேதமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.

வீடியோஸ்


சிவகங்கை
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
Apr 03, 2025, 11:04 IST/

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

Apr 03, 2025, 11:04 IST
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.