மானமதுரை - Manamadurai

அகோரி மடத்தில் ஐம்பொன் சிலைகளை திருடிய பெண்கள்

அகோரி மடத்தில் ஐம்பொன் சிலைகளை திருடிய பெண்கள்

சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் அருகே அகோரி மடத்தில் ஐம்பொன் சிலைகள் உள்ளிட்டவற்றை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்தவர் பாக்கியநாத சுவாமி (72). இவர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பீசர்பட்டினத்தில் அகோரி மடம் நடத்தி வருகிறார். அங்கு அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த மகேஸ்வரி, கஸ்தூரி ஆகியோர் பணிபுரிந்துவந்தனர். இந்நிலையில் அந்த பெண்கள் மடத்தில் இருந்த எல்இடி டிவி, செல்போன், வெள்ளி, தங்கப்பொருட்கள், ஐம்பொன் சிலைகளை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்து மகேஸ்வரியை கைது செய்தனர். அவரிடமிருந்து பொருட்களை கைப்பற்றினர். கஸ்தூரியை தேடி வருகின்றனர்

வீடியோஸ்


சிவகங்கை