சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மின்வாரியத்திற்கு அரசு நிறுவனங்கள் இரண்டு கோடி ரூபாய் வரை மின்கட்டண பாக்கி வைத்துள்ளதாக திருப்புவன பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்ட தகவலின் அடிப்படையில் தகவல் வெளியாகி உள்ளது அந்த தகவலில் திருப்புவனம் தாலுகாவில் திருப்புவனம், பூவந்தி, கீழடி ஆகிய மின்பகிர்மானங்கள் உள்ளன. இவற்றின் மூலம் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள், விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்பட்டு மின்கட்டணம் செலுத்த வேண்டும். பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை தாமதமின்றி மின்கட்டணம் செலுத்துவது வழக்கம். மின்கட்டணத்தை காலக்கெடுவில் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும். மீண்டும் அபராதத்துடன் கட்டணம் செலுத்தி இணைப்பைப் பெற வேண்டும்.
அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை சரியான நேரத்தில் மின்கட்டணம் செலுத்துவதில்லை. பல வருடங்களாக நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை மின்வாரியம் வசூலிக்காமல் உள்ளது. திருப்புவனம் வட்டாரத்தில் 1, 232 மின் இணைப்புகள் மூலம் இரண்டு கோடியே 21 லட்சத்து2, 429 ரூபாய் மின்கட்டண பாக்கி நிலுவையில் உள்ளதாக
வும் குறிப்பிடப்பட்டுள்ளது மின்கட்டணம் முறையாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.