கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.