மேட்டூர் - Mettur

பாலமலையில் பிஎஸ்என்எல் செல்போன் கோபுரம் அமைக்க எம்எல்ஏ மனு

பாலமலையில் பிஎஸ்என்எல் செல்போன் கோபுரம் அமைக்க எம்எல்ஏ மனு

டெல்லியில் நடைபெற்ற தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். பின்னர் அவர் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக மத்திய ஜல்சக்தி துறை, மலைவாழ்மக்கள் நலத்துறை, தொலைதொடர்புத்துறை மந்திரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: - தொப்பூர் -பவானி தேசிய நெடுஞ்சாலை மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எருமைப்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது. இந்த சாலையை 4 வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும். நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து நாகப்பட்டினம் வரை காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு சிறப்பு ஆய்வு செய்து 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலமலைக்கு மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய தார்சாலை அமைக்க வேண்டும். மேலும் மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாலமலையில் பி. எஸ். என். எல். செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా