திருவடனை - Tiruvadanai

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் திருக்கல்யாணம்..!

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உப்பூரில் உள்ள ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8 -வது நாளான இன்று (செப்.,6) விநாயகருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் அருகே உள்ள மணிமண்டபத்தில் விநாயகர் மற்றும் சித்தி-புத்தி தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் மணமேடையில் எழுந்தருளினர். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் மற்றும் மண்டகப்படியார்கள் ஆகியோர் முன்னிலையில் சரியாக விநாயகர் சித்தி, புத்தி தெய்வங்கள் இருவரின் கழுத்திலும் புரோகிதர்கள் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகருக்கும் சித்தி, புத்திக்கும் சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து விநாயகருக்கு பக்தர்கள் திருக்கல்யாண மொய் எழுதினர். மேலும் திருக்கல்யாணம் விருந்தாக பக்தர்களுக்கு இனிப்பு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது இக்கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


இராமநாதபுரம்
Sep 06, 2024, 14:09 IST/இராமநாதபுரம்
இராமநாதபுரம்

சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை.!

Sep 06, 2024, 14:09 IST
ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருளொளி விநாயகர் ஆலயத்தில் இன்று (செப்.,6) 57 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 29ஆம் தேதி காப்பு கட்டுடன் விழா துவங்கியது இதனைத் தொடர்ந்து ஆன்மீக பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக காப்பு கட்டி விரதம் இருந்தனர். ஒன்பது நாட்களும் விநாயகப் பெருமானுக்கு பால் பன்னீர் இளநீர் மஞ்சள் பொடி திரவிய பொடிகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சுமங்கலி பெண்கள் இளம் பெண்கள் கலந்து கொண்ட 108 திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. அழகன்குளம் பிரேமா குழுவினர் திருவிளக்கு பூஜையை சிறப்பாக நடத்தி வைத்தனர். உலக நன்மை வேண்டியும் கல்வி செல்வம், திருமணத்தடை நீங்குதல் மன அமைதி மருத்துவமில்லா வாழ்வு ஆகியவை வேண்டி அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். இன்று (செப்.,6) 57 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அருளொளி விநாயகப் பெருமான் ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க நாக மண்டகப்படி சென்று அங்கு ஆன்மீக பக்தர்களுக்கு அருள் பாலித்து பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் சிறப்பு அறுசுவை அன்னதானம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை வழுதூர் அருளொளி மன்றத்தினர் செய்திருந்தனர்.