
புதுக்கோட்டை: ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
தச்சங்குறிச்சி இயங்கி வரும் இந்தியன் வங்கியில் வரா கடன் தீர்வு சிறப்பு முகாம் 30.12.24 அன்று நடைபெற உள்ளது. இந்த முகாமில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன், ஆழ்துளை கிணறு அமைக்க பெற்ற கடன் ஆகியவற்றின் வட்டியை தள்ளுபடி செய்து அசலை மட்டும் கட்டும் வகையில் வங்கி நிர்வாகம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இது பற்றி கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.