புதுக்கோட்டை மாவட்டம்
கந்தர்வகோட்டை திருவேங்கடம் மகன் ராஜேஷ் (27). இவர் பெரிய கடை வீதியில் சலூன் வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து கந்தர்வ கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.