ஆலங்குடி - Alangudi

வீடியோஸ்


புதுக்கோட்டை
காவேரி நீர் வராததால் கண்மாய்கள் காய்ந்து போச்சு!
Jul 08, 2024, 04:07 IST/அறந்தாங்கி
அறந்தாங்கி

காவேரி நீர் வராததால் கண்மாய்கள் காய்ந்து போச்சு!

Jul 08, 2024, 04:07 IST
அறந்தாங்கி வானம் பார்த்த பூமி ஆன புதுகை மாவட்டத்தில் விவசாயம் மழையை நம்பியே உள்ளது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் சராசரி பெய்தால் மட்டுமே அந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கிறது. மழை பற்றாக்குறையினால் விவசாயிகள் வறட்சி நிவாரணம் கூறும் நிலைக்கு தள்ளப்படுவது வாடிக்கை ஒவ்வொரு ஆண்டும் மழையை நம்பியே விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்பகுதியில் நிலை இப்படி இருக்க கடலோரப் பகுதிகளில் கல்லணை கால்வாய் மூலம் கிடைக்கும் காவேரி நீரால் ஓரளவுக்கு விவசாயம் நடந்து வருகிறது காவிரி நீர் வராவிடில் கடைமடை பகுதியிலும் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அந்த வகையில் ஆவுடையார் கோவில் மாவட்டத்தில் அறந்தாங்கி ஆவுடையார் கோவில் மணமேல்குடி ஆகிய மூன்று தாலுகாவில் 27, 000 ஏக்கர் நிலங்கள் கல்லணை கால்வாய் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. கல்லணையில் இருந்து கல்லணை கால்வாய் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டம் பாசனா வயல்களை கடந்து கடைசியாக புதுகை மாவட்டத்திற்கு வருகிறது. இதனால் முறை வைத்தே தண்ணீர் திறக்கப்படுகிறது புதுகை மாவட்டத்திற்கு வரும் தண்ணீர் சில இடங்களில் நேரடியாகவும் ஆங்காங்கே கண்மாய்களில் தேக்கி வைக்கப்பட்டும் வயலுக்கு பாய்ச்சப்படுகிறது கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்ததால் வழக்கமாக ஜூன் மாதம் 12ஆம் தேதி காவேரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.