ஆலங்குடி - Alangudi

சகோதரர் இருவருக்கு அருவாள் வெட்டு சிசிடிவி காட்சி வெளியீடு!

ஆலங்குடி அருகே மளிகை கடை உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர் மீது மர்ம நபர்கள் முகத்தை மறைத்துக் கொண்டு அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகர் பகுதியிலோய் முபாரக் (54) என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் லெட்சம் முகமது (43) என்பவரும் முபாரக்கிற்கு உதவியாக மளிகைக் கடையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இருவர் கடையின் வெளியே கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முகமதுவை அரிவாளால் வெட்டியுள்ளனர். சகோதரர் மீது வெட்டு விழுவதைக் கண்டு தடுக்க வந்த முபாரக்கிற்கும் அரிவாளால் வெட்டு விழுந்துள்ளது. அருகில் இருப்பவர்கள் திரண்டு வருவதற்குள் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். வெட்டுக்காயமடைந்த இருவரும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மளிகைக் கடை அருகே இருந்த சிசிடிவியில் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஆலங்குடி போலீசார் மர்ம நபர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


புதுக்கோட்டை
May 15, 2024, 08:05 IST/ஆலங்குடி
ஆலங்குடி

சகோதரர் இருவருக்கு அருவாள் வெட்டு சிசிடிவி காட்சி வெளியீடு!

May 15, 2024, 08:05 IST
ஆலங்குடி அருகே மளிகை கடை உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர் மீது மர்ம நபர்கள் முகத்தை மறைத்துக் கொண்டு அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகர் பகுதியிலோய் முபாரக் (54) என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் லெட்சம் முகமது (43) என்பவரும் முபாரக்கிற்கு உதவியாக மளிகைக் கடையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இருவர் கடையின் வெளியே கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முகமதுவை அரிவாளால் வெட்டியுள்ளனர். சகோதரர் மீது வெட்டு விழுவதைக் கண்டு தடுக்க வந்த முபாரக்கிற்கும் அரிவாளால் வெட்டு விழுந்துள்ளது. அருகில் இருப்பவர்கள் திரண்டு வருவதற்குள் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். வெட்டுக்காயமடைந்த இருவரும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மளிகைக் கடை அருகே இருந்த சிசிடிவியில் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஆலங்குடி போலீசார் மர்ம நபர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.