கீரமங்கலத்தில் மிகவும் பழமை வாய்ந்த பாண்டியர்களின் தலைமை புலவர் நக்கீரனால் வழிபாடு நடத்தப்பட்ட ஒப்பில்லாமணி, அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பைரவரை தரிசித்தனர்.