வடகாடு: மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!

59பார்த்தது
ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் (21). இவர் நேற்று காலை தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மாங்காடு பூச்சிகடை பகுதியில் உள்ள முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான பலாப்பழத் தோட்டத்தில் பலாப்பழம் வெட்டிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில், வீரபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி