ஓசூர் - Hosur

ஓசூர்: தடுப்பு சுவரில் டூவீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

ஓசூர்: தடுப்பு சுவரில் டூவீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் ஏழுகிணறு பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவருடைய மகன் நரசிம்மன் (22). இவரும் முரளி (22) என்பவரும் கடந்த 20-ம் தேதி அன்று இரவு டூவீலரில் அத்திப்பள்ளி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளூர் ஜங்ஷன் அருகே சென்றனர். அப்போது டூவீலர் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த நரசிம்மன் ஒசூர் அரசு ஆஸ்பத்திரியிக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார். முரளி காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி