கிள்ளியூர் - Killiyur

புதுக்கடை: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்.. 3 பேர் மீது வழக்கு

புதுக்கடை: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்.. 3 பேர் மீது வழக்கு

புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி வசந்தா (48). இவரது வீட்டு முன்பு அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் மனைவி சரிகா (32) என்பவர் வீட்டு குப்பைகளை கொண்டு கொட்டியுள்ளார். இதை வசந்தா சம்மந்தபட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.   இந்த நிலையில் சம்பவ தினம் மாலை சரிகா மற்றும் அவரது உறவினர்களான கோபி, செல்வராஜ் ஆகிய 3 பேருமாக வசந்தாவின் வீட்டு காம்பவுண்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வசந்தாவை தாக்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். படுகாயம் அடைந்த வசந்தா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.   இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా