பெங்களூரு கட்டிட விபத்து - காரணம் என்ன?

77பார்த்தது
பெங்களூரு கட்டிட விபத்து - காரணம் என்ன?
4 மாடி கட்டிடத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு, 6 மாடியை அனுமதி இன்றி கட்டியதால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்துள்ளது என பாஜக எம்.எல்.ஏ. பைரதி பசவராஜ் பேட்டியளித்துள்ளார். பெங்களூருவில் பெய்து வரும் தொடர் கனமழையால், கட்டுமான பணி நடைபெற்று வந்த அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில், இடிபாட்டிற்குள் சிக்கிய 17 பேரில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி