ஆலந்தூர் - Alandur

துாய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை பணி துவக்க முடிவு

துாய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை பணி துவக்க முடிவு

செங்கல்பட்டில், துாய்மை இந்தியா திட்டத்தில், சமுதாய கழிப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்க, நகரசபை ஒப்புதல் வழங்கியது. செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், பச்சயைம்மன் கோவில், ராமபாளையம் ஆகிய பகுதிகளில், கழிப்பறை கட்டித்தரகோரி, நகராட்சி நிர்வகத்திடம் நகரவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, துாய்மை இந்தியா திட்டம் - 2023- 24ம் நிதியாண்டில், 7வது வார்டு பச்சயைம்மன் கோவில் மற்றும் 21வது வார்டு ராமபாளையம் பகுதிகளில், சமுதாய கழிப்பறை கட்ட, தலா 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்க, நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பணிகள் விரைவில் துவக்கப்படும் என, நகராட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా