விசிக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

75பார்த்தது
அடுத்த மாதம் நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் மாமல்லபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பேச்சு.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நகர துணை செயலாளர் டில்லி ஏற்பாட்டில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல் திருமாவளவனின் 62 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிபி சந்தர், மற்றும் வி ஆர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி ஏழை எளிய மக்களுக்கு அரிசி புடவை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர் நிகழ்ச்சியில் பேசியவர் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் பெற்றதால் மட்டுமே சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்க இந்த அதிகாரம் நமக்கு கிடைத்துள்ளதாகவும் தலைவரின் அரசியல் குறித்த பார்வைகளின் எளிய மக்களுக்கு அதிகாரம் வேண்டும் அம்பேத்கரின் கனவு மெய்ப்பட அயராது உழைத்திட வேண்டும் என அரிய பல கருத்துக்களை பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர் தொடர்ந்து பேசியவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டிற்கு பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.

தொடர்புடைய செய்தி