ஏ எஸ் எம் டி நியு அங்ளிகன் சினாட் கொண்டாடிய சுதந்திர தினம்

69பார்த்தது
78 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சபையில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

ஆனந்த பாக்கிய திருச்சபையின் போதகரும் ஏ எஸ் எம் டி நியூ அங்ளிகன் சினாட் சென்னை மண்டலத்தின் துணைத் தலைவருமான பேராயர் மாதவன் தலைமையில் பனையூர் கிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதம பேராயர் டாக்டர் கே ஜெயசிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேராயர்கள் சென்னை மண்டல செயலாளர் இன்பராஜ் பேராயர் தேவதாஸ் அய்யா சென்னை காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராயர் அன்பு ஜோசப் கேனன்மார்கள் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கேனன் நீலமேகம் கேனன் பாபு,
கேனன் தீனதயாளன் கேனன் கங்காசாமி மூத்த ஆயர் ஆமோஸ் ஐயா போதகர் ஜான் பாபு உட்பட திரளாக சபை விசுவாசிகள் ஊர் பொதுமக்கள் அரசியல் பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் மூத்த குடி மக்களுக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது மேலும் பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இனிப்புகள் வழங்கி தேசிய கீதம் முழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி