சென்னை விமான நிலையத்தில் நட்சத்திர ஆமை கடத்தல்

79பார்த்தது
சென்னை விமான நிலையத்தில், மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 15 லட்சம் மதிப்புடைய 780 நட்சத்திர ஆமைகள், மற்றும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ. 37 லட்சம் மதிப்புடைய, இ சிகரெட்கள், மொத்தம் ரூ. 52 லட்சம் மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் பயணிகள் 4 பேரிடம், சுங்கத்துறை விசாரணை.

சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் (36), யூசுப் (35), அஸ்ரப் (40) ஆகிய மூன்று பேர், சுற்றுலாப் பயணிகளாக, இந்த விமானத்தில் மலேசியா செல்ல வந்திருந்தனர். அவர்கள் பெரிய அட்டைப் பெட்டிகள் வைத்திருந்தனர். அட்டைப் பெட்டிகளில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு, அரிசி, சமையல் பொருட்கள் இருக்கிறது என்று கூறினர்.
ஆனால் அந்த அட்டைப் பெட்டிகள், சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே, லேசாக அசைந்தன. இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அட்டைப் பெட்டிகளை திறந்து பார்த்தபோது, உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் 780 இருந்ததை கண்டுபிடித்தனர்.

மூன்று பயணிகளை கைது செய்து விசாரணை
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி