லண்டன் புறப்பட்ட அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

70பார்த்தது
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று அதிகாலை, சென்னையில் இருந்து விமானம் மூலம், துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில், அவருக்கு பாஜகவினர் உற்சாகமாக திரண்டு வந்து வழி அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று அதிகாலை 4 மணிக்கு, சென்னை விமான நிலையத்திலிருந்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், மேற்படிப்பு படிப்பதற்காக த லண்டன் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நான்கு மாதங்கள் லண்டனில் தங்கியிருந்து, அங்கு உள்ள, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், மேற்படிப்பு படிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை 4 மாதங்கள் படிப்பை முடித்துவிட்டு, வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள், சென்னைக்கு திரும்புவார் என்று, பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் செல்வதற்காக இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில், சென்னை சர்வதேச விமானநிலையம் வந்த, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள், பாஜகவினர் உற்சாகமாக வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி