ஆலந்தூர் - Alandur

தம்பதிக்கு 'டார்ச்சர்' டாக்டர் கைது

தம்பதிக்கு 'டார்ச்சர்' டாக்டர் கைது

வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், டாக்டராக பணிபுரிபவருக்கும், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் இளம்பெண்ணிற்கும், ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும், ஜமீன் பல்லாவரத்தில் வசிக்கின்றனர். இந்நிலையில், இளம்பெண்ணின் நண்பரான, கடலுார் மாவட்டம், குறிஞ்சிபாடியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 27, என்ற டாக்டர், இளம்பெண்ணிற்கு அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார், இளம்பெண்ணின் கணவருக்கு சில நாட்களாக, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருந்து ஆபாச புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார். மேலும், அவரது மனைவியை கற்பழித்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். இது குறித்து, பெண் டாக்டரின் கணவர், பல்லாவரம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்து போலீசார், சுரேஷ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా