நெடுஞ்சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்

57பார்த்தது
நெடுஞ்சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்
வண்டலுார் வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், இந்த சாலை பராமரிப்பின்றி உள்ளது. சாலையின் இரு புறங்களிலும் ஆங்காங்கே மண் திட்டுகள் பரவலாக உள்ளன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மண் குவியலில் சிக்கி, நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள மண் குவியலை அகற்றி, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும். என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி