7 டன் கஞ்சாவை எரித்து அழித்த காவல்துறையினர்

62பார்த்தது
பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 7 டன் கஞ்சாவை எரித்து அழித்த காவல்துறையினர்.


செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட தென்மேல் பாக்கம் ஊராட்சி அரசு காப்பு காட்டில் தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகளை எரியூட்டும் நிறுவணத்தில் வடக்கு மண்ட காவல் துறை எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களிலிருந்து 212 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 956. 65 கிலோ கஞ்சா

மேலும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு மூலம் தமிழகம் முழுவதிலுமிருந்து கைப்பற்றிய 6 1/2 டன் கஞ்சா ஆகியவற்றை விழுப்புரம் சரக போலிஸ் டி. ஐ. ஜி. திஷால் மித்தல் தலைமையில் எரிவாயுவில் போட்டு அழித்தனர். இதில் செங்கல்பட்டு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சாய் பிரனித், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலிஸ் சூப்பிரண்டு சாம்சன், செங்கல்பட்டு மாவட்ட கலால் போலிஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன், விழுப்புரம் போலிஸ் துணை சூப்பிரண்டு பிரதீப்குமார், செங்கல்பட்டு தாலுக்கா போலிஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட போலிசார் கஞ்சா பொருட்களை தீயில் போட்டு எரித்தனர்.

தொடர்புடைய செய்தி