திண்டிவனம் - Tindivanam

தீ பிடித்து படுகாயமடைந்த மூதாட்டி இறப்பு

தீ பிடித்து படுகாயமடைந்த மூதாட்டி இறப்பு

திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் மனைவி கங்கா, (41); இவரது தாயார் கஸ்துாரி, (62); இவருக்கு பார்வை குறைபாடு உள்ளது. கடந்த 20ம் தேதி காலை 10: 30 மணியளவில் வீட்டு வாசற்படியில் ஏற்றி வைத்திருந்த விளக்கின் அருகே கஸ்துாரி நின்றபோது நைட்டியில் தீ பிடித்து படுகாயம் அடைந்தாா். சிகிச்சைக்காக சென்னை கே. எம். சி. , மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து நேற்று ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా