சங்கராபுரம் - Sankarapuram

சங்கராபுரம்: மயிலை வேட்டையாடிய இருவர் கைது

சங்கராபுரம்: மயிலை வேட்டையாடிய இருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் விரியூர் கிராமத்தில் இருந்து குளத்தூர் செல்லும் வழியில் சங்கராபுரம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது குளத்தூரில் இருந்து விரியூர் வழியாக சென்ற விரியூர் கிராமத்தைச் சார்ந்த அருளப்பன் மகன் சூசை ராஜ் (38) அதே கிராமத்தைச் சார்ந்த அருளப்பன் மகன் இருதயராஜ் (40) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இருவரையும் அழைத்து விசாரித்த போது அவர்களது கையில் இருந்த சாக்கு பையில் இரண்டு கிலோ எடையுள்ள பெண் மயிலை வேட்டையாடி இறந்த நிலையில் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர். பின்பு வேட்டையாடிய இருவரையும் இறந்த நிலையில் உள்ள பெண் மயில் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் சங்கராபுரம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பெண் மயிலை வேட்டையாடி சாக்கு பையில் இறந்த நிலையில் எடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி