போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்யும் வடமாநில கும்பல்

77பார்த்தது
போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்யும் வடமாநில கும்பல்
சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள நகை அடகுக் கடையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 15 லட்சம் பணத்தை பெற்ற ராஜஸ்தானை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஒவ்வொரு மாநிலமாக சென்று ஒரு மாதம் தங்கி இது போன்ற மோசடியில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணத்தை சரிசமமாக பங்கிட்டு வந்துள்ளனர். இதற்காக போலி ஆதார் கார்டு மூலம் செல்போன் எண் பெற்று உபயோகித்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.