கழிவறை மீது விழுந்த மின் கம்பியை தொட்டவர் பலி

64பார்த்தது
கழிவறை மீது விழுந்த மின் கம்பியை தொட்டவர் பலி
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் நேற்று (அக். 13) கனமழை பெய்த நிலையில் அங்குள்ள ஒரு வீட்டின் கழிவறை மீது மின் கம்பி அறுந்து விழுந்தது. அதை குமரேசன் (70) என்பவர் கைகளால் அகற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையில் குடியிருப்பு பகுதி வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி