கல்வராயன்மலை: சாராய ஊரல் அழிப்பு

61பார்த்தது
கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராய ஊரல்கள் மற்றும் கள்ளச்சாரயத்தை கண்டுபிடித்து அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் குணசேகர் மற்றும் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வண்டகப்பாடி ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரல் 200 லிட்டர் அளவு பிடிக்கக்கூடிய 04 பேரல்களில் சுமார் 800 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 3 பிளாஸ்டிக் குடங்களில் இருந்த 10 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். மேலும் இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி