மது வைத்திருந்தவர் மீது வழக்கு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் அடுத்த தட்ட கரை ஃபாரஸ்ட் ஆபீஸ் பகுதியில் பர்கூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சுண்டப்பூரை சேர்ந்த முருகன் 24 என்பவரை விசாரித்தனர். அப்போது சட்ட விரோதமாக கிங்பிஷ்ஷர் பீர் மற்றும் ஓல்டு மங் ரம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.