கோபி - Gobichettipalayam

ஈரோடு: மூதாட்டியிடம் ரூ. 1.44 லட்சம் திருடிய டிரைவர்

ஈரோடு: மூதாட்டியிடம் ரூ. 1.44 லட்சம் திருடிய டிரைவர்

ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டம்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சடையப்பன் மனைவி பாப்பாள் (70). ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர். பாப்பாள் வங்கி கணக்கில் அவருக்கு வரும் ஓய்வூதிய பணம் ரூ. 1.76 லட்சம் சேமித்து வைத்திருந்தார். இதனை அவருக்கு தெரிந்த அறச்சலூர் ஜேஜே நகரை சேர்ந்த கோபால் (38) என்பவருடன் எடுத்து தர அறிவுறுத்தியுள்ளார். அவரும் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவது போல் உதவி செய்து, பாப்பாள் வங்கி கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொண்டார்.  இதையடுத்து பாப்பாளை ஏமாற்றி, அவரது ஏடிஎம் கார்டினை எடுத்து கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை ஏடிஎம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்தை திருடியுள்ளார். இதனை அறிந்த பாப்பாள் சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా