மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூடக்கரை பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடையின் உரிமையாளர் மருதவாணி வயது 80 ஐ போலீஸர் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த 300 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.