
நல்லூர்: வில்வனேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வில்வனேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.