
கோவை; குடிப்பழக்கத்தை மறக்க சிகிச்சை பெற்றவர் சாவு
கோவை வெறைட்டிஹால் ரோடு தாமஸ் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (50). இவர், குடிப்பழக்கத்தை மறக்க வடவள்ளியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவரால் குடிப்பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனால், அவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி வீட்டில் இருந்த மூர்த்தி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார். அப்போது, மளிகைக்கடைக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய அவரது மனைவி பேச்சியம்மாள் (35) தனது கணவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மூர்த்தி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.