கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு - கேரள மாநில காவல்துறையினரின் எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று (செப்.,20) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தகேயன், கேரளா காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்ப் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வதி ஜுஜி, பாலக்காடு கலால் துறை ஆணையர் ராகேஷ், பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், அகலி துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் உள்ளிட்ட பல்வேறு காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சட்டவிரோத போக்குவரத்து, மருத்துவக் கழிவுகள், கால்நடைக் கழிவுகளை கொட்டுவதைத் தடுத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு போன்ற பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன. இரு மாநில காவல் அதிகாரிகளும் எல்லை தாண்டி செயல்படும்போது எதிர்கொள்ளும் இடையூறுகளை எடுத்துரைத்தனர்.
இதையடுத்து, இரு மாநில காவல் கண்காணிப்பாளர்களும் பணியில் உள்ள இடையூறுகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.