திருச்சுழி - Tiruchuli

வீடியோஸ்


விருதுநகர்
புளியமரம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
Jul 23, 2024, 01:07 IST/அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை

புளியமரம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

Jul 23, 2024, 01:07 IST
அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தம் கிராமத்தில் அய்யனார் கோவில் அருகில் உள்ள புளியமரம் ஒன்று நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. ‌ இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீச்சி அடித்து புளிய மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் மீண்டும் அதே போல அதே மரத்தில் நேற்று தீப்பிடித்து எரிய துவங்கியது. இதைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மீண்டும் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து முழுமையாக தீயை அணைத்தனர். ‌ ஏற்கனவே உள்ள இருந்த தனல் காரணமாக மீண்டும் மரம் தீப்பிடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ‌ மேலும் பந்தல்குடி போலீசார் மரத்திற்கு யாரேனும் தீ வைத்தனரா? இல்லை மின் வயர் ஏதேனும் உரசி தீப்பிடித்ததா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.