திருச்சுழி - Tiruchuli

ரப்பர் கழிவில் தீ விபத்து

காரியாபட்டியில் ரப்பர் கழிவில் தீ விபத்து - புகை மண்டலத்தினால் ஒரு சிலருக்கு மூச்சு திணறல் - விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பெரிய பள்ளிவாசல் பின்புறம் பாழடைந்த கிணற்றில் ரப்பர் கழிவுகளை கொட்டி மர்ம நபர்கள் தீவைத்து எரித்து விட்டு சென்றுள்ளனர். இதனால் தீ மள, மள வென பரவி காரியாபட்டி பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இந்த புகை மண்டலத்தால் ஒரு சிலருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பாழடைந்த கிணற்றில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு புகை மண்டலம் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Mar 23, 2025, 11:03 IST/ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவி: கலை இலக்கிய பெருவிழா. மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு....

Mar 23, 2025, 11:03 IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் வள நாட்டின் கலை இலக்கிய பெருவிழா. அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி ரோட்டில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான போட்டிகள் "மல்லி வள நாட்டின் கலை இலக்கிய பெருவிழா" என்ற பெயரில் நடைபெற்றது. இப்போட்டியில் 25-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, சிலம்பப் போட்டி மற்றும் நாட்டுப்புற கலைகள் உள்ளிட்ட போட்டி நடைப்பெற்றன. கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தமிழர்களின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றக்கூடிய பல்வேறு கலை நிகழ்ச்சியில் நடத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நடைப்பெற்ற போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் ஷீப்பை சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரி தட்டி சென்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் பரிசுகளை வழங்கி பாராட்டுகள் தெரிலித்தார்.