தகுதியானவர்களுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்

54பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

பல்வேறு கிராமங்களில் நியாய விலை கடை இல்லாததால் பல கிலோமீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது என்று பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் பேசி தர்மாபுரம், உடுப்புக்குளம், கூவர்குளம், துலுக்கன்குளம் ஆகிய கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

சாலை மறைக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்து வசதி செய்து தரக் கோரியும், குடிநீர் வசதி செய்து தர கோரியும் கிராம மக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர். அதற்கு அமைச்சர் ஊராட்சி செயலாளரிடம் அடுத்த முறை தான் வரும்பொழுது இப்பகுதியில் குடிதண்ணீர் வசதி இருக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். திருவிருந்தால்புரத்தில் நடைபெற்ற திறப்பு விழாவின் போது அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காரியாபட்டியில் உழவர் சந்தையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி