ஸ்ரீ திருமேனிநாதர்கோவில் பங்குனி பொங்கலை முன்னிட்டு வீதி உலா

50பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த
அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றம் நேற்றையதினம் வெகு
விமரிசையாக நடைபெற்றது.

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருச்சுழி அருள்மிகு
ஸ்ரீ திருமேனிநாதர் கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து
10 நாட்கள் நடைபெற உள்ள இந்த பங்குனித்திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் திருச்சுழி சுற்றுவட்டாரப்
பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், ஒவ்வொரு நாளும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். இந்த நிலையில் திருவிழாவின் 2ம் நாளான இன்று ஸ்ரீ திருமேனிநாதர் சுவாமி மற்றும் அம்பாள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி மற்றும் அம்மனைத் தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து வரும் ஏப்ரல் 9ம் தேதி திருக்கல்யாண வைபவமும், ஏப்ரல் 10ம் தேதி மஹா திருத் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி