
செங்கம்: பள்ளி வகுப்பறை கட்டிட திறப்பு விழா; எம்எல்ஏ பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியம், இராயண்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட விஜியப்பனூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதியதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தினை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் திவ்யபாரதி ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் கோ. இரமேஷ், மு. ஒன்றிய செயலாளர் சி. ஜெயராமன், ஒன்றிய துணை செயலாளர் கல்பனா ஜோதி, மாவட்ட பிரதிநிதிகள் எஸ். ஜோதி, வெங்கடேசன், புகழேந்தி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் எஸ். சுரேஷ், எஸ். சதீஷ்குமார், ஆர். சங்கமித்திரை, கிளை கழக செயலாளர்கள் வேலாயுதம், மொட்டையன், குபேந்திரன், முருகானந்தம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் இரவீந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.