செங்கம் - Chengam

மக்களின் தேவைக்காக வழங்கப்பட்ட குடிநீர்

மக்களின் தேவைக்காக வழங்கப்பட்ட குடிநீர்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை என்று மக்கள் அனைவரும் சேர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர், அதனை தொடர்ந்து ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முயற்சியில் காரணமாக உடனடியாக பழுதடைந்த மோட்டார்களை சரி செய்து ஆண்டிப்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கு அனைவருக்கும் குடிநீர் வழங்கி உள்ளார்கள் மேற்படி சாலை மறியலால் உடனடியாக அனைத்து தெருக்களுக்கும் அனைத்து வீடுகளுக்கும் சென்றடையும் வண்ணம் ஊராட்சி மன்ற தலைவர் செய்தது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆண்டிப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
பொதுமக்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு
Jul 16, 2024, 14:07 IST/வந்தவாசி
வந்தவாசி

பொதுமக்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு

Jul 16, 2024, 14:07 IST
இன்று (16. 07. 2024) திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு பேரூராட்சியில் கழகத்தின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் கஞ்சா போதை பொருள் மற்றும் கள்ளச்சாராயம் தலைவிரித்து ஆடுவதை கண்டித்து, திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் L. ஜெயசுதா லட்சுமி காந்தன், சேத்துப்பட்டு பேரூராட்சியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரச்சாரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் , கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.